Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலவர் புலமைப்பித்தன் காலமானார்

செப்டம்பர் 08, 2021 01:08

சென்னை: அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் (85) கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி புலவர் புலமைப்பித்தன் காலமானார்.

நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்